பிஃபாவின் (FIFA) ஒழுங்கு விதிகளை மீறியதற்காக ஆர்ஜென்ரீனாவின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸுக்கு 02 போட்டிகளில் பங்கேற்பதற்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தென் அமெரிக்க கால்பந்து சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (27) தெரிவித்துள்ளது.
ஆர்ஜென்ரீனா கால்பந்து சங்கம் (AFA) தீர்ப்பை விமர்சித்தது. ஆனால், மேன்முறையீடு செய்யப்படுமா? என்று தெரியவில்லை.
"FIFA ஒழுங்குமுறைக் குழு எடுத்த முடிவில் AFA தனது முழுமையான உடன்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அது கூறியது.
2024 அக்டோபர் 10 ஆம் திகதி வெனிசுலாவுக்கு எதிரான ஆர்ஜென்ரீனாவின் உலகக் கோப்பை தகுதிச் சுற்று 05 நாட்களுக்குப் பின்னர் பொலிவியாவுக்கு எதிரான போட்டிகளில் மார்டினெஸ் விளையாட மாட்டார்.
0 Comments