Ticker

6/recent/ticker-posts

கவிஞர் மித்ரா நினைவு தின ஹைக்கூ கவிதைப் போட்டி - 2024

கவிஞர் மித்ரா அவர்களின் 04 ஆம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் அக்டோபர் 04 ஆகும்.



பேரன்புக் கவிஞர், இணையாசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் வாழ்த்தோடு ‘இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழும், தஞ்சையின் புகழ் வாய்ந்த மருத்துவரும், இனிய கவிஞருமான கவிநிலா மோகன் அவர்களின் முன்னெடுப்பிலும் ஹைக்கூ கவிதைப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்க உலகு தழுவிய தமிழ் ஹைக்கூ கவிஞர்களை அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

இந்த ஹைக்கூ கவிதைப் போட்டியின் நடுவராக இருந்து சிறந்த கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பினை நான் ஏற்றுள்ளேன்.

முதல் பரிசு: ரூ.5 ஆயிரம்
இரண்டாம் பரிசு: ரூ.3 ஆயிரம் 
மூன்றாம் பரிசு: ரூ. 2 ஆயிரம்
ஆறுதல் பரிசு: 10 கவிஞர்களுக்கு தலா 
ரூ.500 மதிப்புள்ள நூல் பரிசு.

விதிமுறைகள்
01. ஒருவர் 03 ஹைக்கூ கவிதைகள் மட்டுமே அனுப்ப வேண்டும். 
02. தலைப்புகள் எதனயும் இட வேண்டாம்.
03. தாங்கள் விரும்பும் கருப்பொருளில் எழுத முடியும்.
04. கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி திகதி: 2024 அக்டோபர் 31
05. ஹைக்கூ கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: haiku.mumu@gmail.com
06. இது புதுக்கவிதைப் போட்டியல்ல; 03 வரி ஹைக்கூ கவிதை என்பதை மனதில் கொள்ளுங்கள். ஹைக்கூ கவிதை பற்றி அறிந்து கொண்டு எழுதுமாறு வேண்டப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments