Ticker

6/recent/ticker-posts

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு புதிய மாணவர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரல் - 2025


ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.



புதிய மாணவர் பிரவேசத்திற்கான நேர்காணல் எதிர்வரும் 2024 ஒக்டோபர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பபடிவங்களை நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினங்களில் ஜாமிஆ நளீமிய்யாவின் வாயிற்காவல் பகுதியில் வைத்து விநியோகிக்கப்படும்.

நேர்முகப் பரீட்சை மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஜாமிஆ நளீமிப்யா கலாபீட வளாகத்தில் நடைபெறும்.

இக்கலாபீடத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கலை (Arts) மற்றும் வர்த்தக (Commerce) போன்ற பிரிவுகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

நேர்முகப் பரீட்சை 8.00 AM இற்கு ஆரம்பமாகும்.
எழுத்துப் பரீட்சை மதியம் 12.00 PM மணிக்கு ஆரம்பமாகும்.

பரீட்சாத்திகள் எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்:
1. பிறப்புச் அத்தாட்சிப் பத்திரம்
2. GCE (O/L) பரீட்சைப் பெறுபேற்று அட்டை
3. அடையாள அட்டை
4. மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
5. இறுதியாக கல்வி கற்ற பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
6. புலமைச் சான்றிதழ்கள்

2024.10.05 ஆம் திகதி சனிக்கிழமை:
வடக்கு, வட மத்திய, வட மேல், தென் மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு நடைபெறும்.

2024.10.06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை:
கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்முகம் மற்றும் எழுத்துப் பரீட்சைகள் நடைபெறும்.

இணையத்தளம்: www.naleemiah.edu.lk
தொடர்புகளுக்கு: 0342276338 / 0776504765
முகவரி: P.O. Box: 01, Beruwala, 12070, Sri Lanka



Post a Comment

0 Comments