Ticker

6/recent/ticker-posts

பல பகுதிகளில் 65 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடை.

பராமரிப்பு பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தை எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி நள்ளிரவிலிருந்து மூடுவதற்கு மகாவலி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.


இதன் காரணமாக, கண்டி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு 65 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.



பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 02 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (27) நள்ளிரவு முதல் நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.



வரட்சியான காலநிலை காரணமாகவும், ரஜரட்ட பிரதேசத்தில் விவசாயப் பணிகள் இந்த நாட்களில் முடிவடைந்ததாலும், குறித்த நாட்களில் நீர்த்தேக்கத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.



இதன் பிரகாரம், நீர்த்தேக்கத்தில் தேங்கியுள்ள நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படவுள்ளது. நீர்த்தேக்கம் மூடப்படவுள்ளதால், மகாவலி ஆற்றில் விளையாடுவதற்கோ, மீன்பிடிப்பதற்கோ மக்கள் செல்வதை தவிர்க்குமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.



பொல்கொல்ல நீர்த்தேக்கம் மூடப்படுவதால் செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கண்டி மற்றும் பொல்கொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் விநியோகம் இல்லாததால் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.



இதன்படி, செப்டம்பர் 30 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 01 மணி முதல் மாலை 06 மணி வரை 65 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.



கண்டி மாநகர சபை, ஹஸ்பத்து, புஜாபிட்டிய, பததும்பர மற்றும் அக்குரணை நீர் விநியோக அமைப்புக்கள், குண்டசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராஜவெல்ல, சிறிமல்வத்தை, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான மற்றும் வளல ஆகிய பகுதிகளுக்கும் விநியோகம் தடைப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments