ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 AM இற்கு முன்னர் வெளியிட முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 PM - 9.00 PM மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலுமுள்ள வாக்குப் பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
தபால் மூல வாக்களிப்புக்கு 712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கைகள் மாலை 4.00 மணிக்கு தொடங்குகிறது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*To join with us:*
0 Comments