Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண ஆளுனர் ஜனாதிபதியால் நியமனம்.

பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை, கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி அநுர குமார திசாயக்க நியமித்துள்ளார்.

இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அனைவரும் அண்மையில் பதவி விலகியிருந்தனர். இந்நிலையிலேயே, கிழக்கு மாகாண ஆளுனராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஜயந்த லால் ரத்னசேகர?

01. பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

02. இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி தொடக்கம் 2023 நவம்பர் வரை பணியாற்றியுள்ளார்.

03. ஜயந்த லால் ரத்னசேகர தனது ஆரம்ப கல்வியை கந்தளாய் அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வி கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) கற்றார்.

04. தொடர்ந்து இவர், ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் (Peoples' Friendship University of Russia) 1988 இல் வேதியியலில் கலைமானி பட்டம் பெற்றதை தொடர்ந்து, 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைஙும் பெற்றுக் கொண்டார்.

05. மேலும், 1988 இல் வேதியியலில் கலைமானி பட்டம் பெற்றதை தொடர்ந்து, 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

06. ஜயந்த லால் ரத்னசேகர 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்தார்.

07. 20018 ஆம் ஆண்டு வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

08. இதனை தொடர்ந்து 2017 ஜனவரியில் இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

09. 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்கள் குழுவின் (CVCD) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

10. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச் சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி போன்றவற்றில் ஆராய்ச்சி தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments