காத்தான்குடியில் 04 தசாப்த காலமாக இயங்கி வரும் அல் மிஅது வித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனப் பிரிவு, ஷரீஆப் பிரிவு ஆகிய கற்கை நெறிகளுக்காக புதிய மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக் கல்லூரியின் கற்கை நெறிகள் பின்வரும் சிறப்பம்சங்களை கொண்டதாக இருக்கும்.
01. ஷரீஆ பிரிவில் கற்றுக் கொண்டு அல்-ஆலிம் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
02. அரபு மொழியில் விஷேட பயிற்சி வழங்கப்படும்.
03. GCE (/L) மற்றும் GCE (A/L) ஆகிய பரீட்சைகளுக்குத் தயார்படுத்தல்.
04. தர்மச்சாரியா பரீட்சைக்காக மாணவிகளை தயார் செய்தல்.
இதற்காக கீழ்க்காணும் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அல்-குர்ஆன் மனனப் பிரிவு
01. 2025 இல் தரம் 06 க்கு சித்தியடையக் கூடியவராக இருத்தல்
02. தேகாரோக்கியமும் நல்லொழுக்கமும் உள்ளவராக இருத்தல்.
ஷரீஆப் பிரிவு
அல்குர்ஆனை சரலமாக ஓதத் தெரிந்திருத்தல்
01. 2025 இல் தரம் 7 க்கு சித்தியடைந்தவராக இருத்தல்.
02. தேகாரோக்கியமும் நல்லொழுக்கமும் உள்ளவராக இருத்தல்.
03. வெளியூர் மாணவிகள் எனில் விடுதியில் தங்கியிருந்து கல்வி பெறுவதற்கு தயாராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப்படிவங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ரூபாய் 150.00 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலம் பெற விரும்புவோர் ரூபாய் 150.00 இற்கு AL JAMATHUS SIDDEEQIYYA MUSLIM LADIES ARABIC COLLEGE எனும் பெயருக்கு காசோலை அல்லது காசுக் கட்டளையை இணைத்து அனுப்புமாறு வெ.ண்டப்படுகின்றனர்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 15.5.2024 ஆக
அனுப்ப வேண்டிய முகவரி:
அல்-ஜாமிஅதுஸ் வித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி
காத்தான்குடி - 05
தொடர்புகளுக்கு: 0777173523
0 Comments