Ticker

6/recent/ticker-posts

பதில் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியால் நியமனம்.

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.


 

158 வருட பொலிஸ் வரலாற்றில் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்து கொண்டவர்களின் வரிசையில் பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்று கொண்டிருக்கும் ஒரே அதிகாரி பிரியந்த வீரசூரிய ஆவார்.


 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் பட்டம் பெற்ற இவர், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பொலிஸ் அதிகாரியாக நிலை உயர்வும் பெற்றார்.

 


மனித வள முகாமைத்துவம் (HRM) தொடர்பிலான வர்த்தக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றுள்ளார். பொலிஸ் திணைக்களத்திற்குள் 36 வருட கலங்கமற்ற சேவையை ஆற்றியுள்ள வீரசூரியவின் சேவையைப் பாராட்டி 10 பொலிஸ்மா அதிபர்கள் கடிதம் வழங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.


 

பொலிஸ் குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், பொலிஸ் விநியோகப் பிரிவின் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ள இவர், கிழக்கு தீமோர் மற்றும் ஹைட்டி இராஜ்ஜியத்தில் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

 


பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுக் கொள்ளும் வேளையில், வீரசூரிய வட மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments