Ticker

6/recent/ticker-posts

பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுதப் படை தலைவர் மரணம்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடாத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுதப் படைகளின் தலைவரான இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார் என்பதை லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது.


இப்ராஹிம் அகில் தவிர, ஹிஸ்புல்லாவின் பல உயர் அதிகாரிகளும் குறித்த இஸ்ரேலிய தாக்குதலில் மரணித்தாக கூறப்படுகின்றது.



தஹியா மாகாணத்தில் நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மேலும், பலர் காயம் அடைந்தனர். தாக்குதலால் இடிந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments