Ticker

6/recent/ticker-posts

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று தொடக்கம் (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் பணி அக்டோபர் 4 ஆம் திகதி முதல் 2024 அக்டோபர் 11 ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, புதிய நாடாளுமன்றம் 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ளதாகவும் மேலும்  தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments