Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் புதிய பிரதமர் பதவியேற்பு.

ப்பான் நாட்டின் புதிய பிரதமராக 67 வயதான முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 2024 ஒக்டோபர் 01 இல் இவர் ஜப்பானின் 102 வது பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார்.

ஜப்பான் பிரமதமர் பதவிக்கு இம்முறை வரலாறு காணாத போட்டி நிலவியது. தலைமைத்துவத் தேர்வுக்கான உட்கட்சித் தேர்தலில் 09 பேர் போட்டியிட்டனர். ஜப்பானிய அரசியல் வரலாற்றில் தலைமைப் பதவிக்கு அதிகளவான போட்டியாளர்கள் போட்டியிட்டது இதுவே முதற் தடவையாகும். 

09 பேரில் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷின்ஜிரோ கொய்சுமி, பொருளியல் பாதுகாப்பு அமைச்சர் சானே தகாய்ச்சி, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா, ஆகிய 03 பேரும் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகினர்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பில் கடும் போட்டி நிலவிய நிலையில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பில், தற்போதைய பொருளியல் பாதுகாப்பு அமைச்சரான சானே தகாய்ச்சியை, ஷிகெரு இஷிபா பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.

வாக்கெடுப்பின் போது, இஷிபாவுக்கு ஆதரவாக 215 வாக்குகளும் திருவாட்டி தகாய்ச்சிக்கு ஆதரவாக 194 வாக்குகளும் கிடைக்கப் பெற்றிருந்தன.

ஜப்பான் பிரதமர் பதவிக்கு ஏற்கனவே 04 முறை முயற்சித்து தோற்ற போதிலும், 05 வது முயற்சியில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

தமது அரசாங்கத்தின் மீது தொடர்ந்தேர்ச்சையாக மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்ததால், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கிஷிடா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இதனையடுத்து, உடனடியாக புதியவரைத் தேர்ந்து எடுக்க வேண்டிய அவசியம் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments