Ticker

6/recent/ticker-posts

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு.

ஊரடங்குச் சட்டம் இன்று (22) நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று (21) இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை ஊரடங்கானது நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு பொலிஸ் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கின்ற போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments