Ticker

6/recent/ticker-posts

யார் இந்த அநுரகுமார திசாநாயக்க?

01. இலங்கையின் 09 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று (23) காலை பதவியேற்றார்.



02. அநுரகுமார திஸாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி மாத்தளை தேவஹுவ என்ற கிராமத்தில் பிறந்தார்.

03. திசாநாயக்க முதியன்சலாகே ரன்பண்டா மற்றும் திசாநாயக்க முதியன்சலாகே சீலாவதி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

04. திஸாநாயக்க குடும்பத்தில் இரண்டாமவராக இருந்த அனுர, தனது அடிப்படைக் கல்வியை தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் பயின்றார்.

05. சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இவர், உயர் தரக் கல்வியை தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றார்.

06. அங்கு விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் உயர்தரத்தில் சித்தியடைந்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.

07. 1987 ஆம் ஆண்டு பாடசாலை மாணவராக இருந்த போது, ​​இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கெதிராக சோசலிச மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளராக இருந்த அநுர குமார, பல்கலைக்கழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகராக மாறினார்.

08. அங்கு மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த சோசலிச மாணவர் சங்கத்தை கட்டியெழுப்பிய அநுர குமார பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் 'அரவிந்த' என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.

09. மேலும், அவர் களனி பல்கலைக்கழக பௌத்த சங்கத்தின் தலைவராகவும் இவர் பதவி வகித்தார்.

10. அநுரகுமார திசாநாயக்க தனது உயர்கல்வியை முடித்து 1995 இல் விஞ்ஞானப் பட்டதாரியாக பல்கலைக்கழகத்தை விட்டும் வெளியேறினார்.

11. அநுர குமார திசாநாயக்க 1997 இல் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அநுரவின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது.

12. அதன் பின்னர் ஒரு வருடத்தின் பிறகு 1998 ஆம் ஆண்டு அநுரகுமார JVP - யின் அரசியல் சபையில் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

13. பின்னர், 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.

14. அந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

15. 2004 ஆம் ஆண்டில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிக விருப்பு வாக்குகளை பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

16. 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராக கடமையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க, இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

17. 2014 பெப்ரவரி 02 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 07 வது தேசிய மாநாட்டில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசியல் பயணம் மிக முக்கியமான கட்டத்திற்கு சென்றது.

18. அன்று JVP யின் தலைமைத்துவம் சோமவன்ச அமரசிங்கவிடமிருந்து அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாற்றப்பட்டது.

19. அநுரகுமார திஸாநாயக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக பணியாற்றினார்.

20. 2019 ஆகஸ்ட் மாதம் மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து 'தேசிய மக்கள் சக்தி' என்ற புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது.

21. இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 418,553 வாக்குகளைப் பெற்று 3.16% வாக்கு சதவீதத்தைப் பெற்றார்.

22. பின்னர் 2021 டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் முதலாவது தேசிய மாநாட்டில் அநுர, தேசிய மக்கள் சக்தியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்

23. அதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்க, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கங்கங்களின் அடிமட்டத்திற்கே சென்று அதன் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தியதோடு, மக்களுக்கு தௌிவுறுத்தி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் களமிறங்கினார்.

24. "வளமிக்க நாடு - அழகிய வாழ்வு" என அநுர நாட்டின் முன் வைத்த கொள்கைப் பிரகடனத்திற்கு மக்களின் சம்மதம் கிடைத்த பின்னர் அதனை நனவாக்கும் சந்தர்ப்பம் தற்போது அநுரவிக்கு கிடைத்துள்ளது.

24. இலங்கையின் 09 வது ஜனாதிபதியாக பதவியேற்று அடுத்த 05 வருடங்களுக்கு நாட்டையும், மக்களையும் பொறுப்பேற்கிறார் தௌரிவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்.



Post a Comment

0 Comments