Ticker

6/recent/ticker-posts

இன்று நள்ளிரவு எரிபொருள் விலை மாற்றம் குறித்த தகவல்.

புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறுமா? என்பது குறித்து மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்பதையும் அது தொடர்பான பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது மாதத்தின் கடைசி நாளில் எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், எரிபொருள் விலை சூத்திரம் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

கடந்த மாத விலைச்சூத்திரத்தின் பிரகாரம், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 332 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 10 ரூபாவால் குறைக்கப்பட்ட டீசலின் விலை தற்போது 307 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், இன்று நள்ளிரவும் குறித்த விலையில் மாற்றம் வருமா? என்று மக்கள் அதீத ஆர்வத்துடன் உள்ளனர்.





Post a Comment

0 Comments