Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவராக ஹஷேம் சஃபிதீன் அறிவிப்பு.

ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ​ஹஷேம் சஃபிதீன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


சஃபிதீன் சுமார் 32 வருடங்கள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினர் ஆவார்.

இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சஃபிதீனும் கொல்லப்பட்டத்தாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா அமைப்பில் ஆரம்பம் தொட்டே இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.

ஈரானில் தனது படிப்பினை நிறைவு செய்த அவர், 1990 இல் மீண்டும் லெபனானுக்கு அழைக்கப்பட்ட போது, அவர் நஸ்ரல்லாவின் வாரிசாக நியமிக்கப்பட்டிருந்தார்.

2017 ஆம் ஆண்டு அமெரிக்காவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட சஃபிதீன், ஹிஸ்புல்லாக்களின் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடுபவராக செயற்பட்டார்.

மேலும், சிரியாவை ஆதரித்ததற்காக சவூதி அரேபியாவால் இவர் கறுப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்தாகும்.

Post a Comment

0 Comments