Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார. நாளை உத்தியோகபூர்வமாக பதவியேற்பு.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 09 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் 02 வது விருப்பத் தேர்வு எண்ணப்பட்டு மாவட்ட ரீதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் 02 இடங்களில் முன்னிலை வகித்த அநுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதன் முடிவுகளுக்கமைய அநுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக தேர்வானார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளையே பெற்றுள்ளார்.

விருப்பு வாக்குகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் முன்னிலை வகிக்கின்ற போதிலும் மொத்த வாக்குகளை தொடுவது அவருக்கு கடினமாக காணப்பட்ட நிலையில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையானது 12,915,795 என்பதுடன், இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 12,632,003 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 283, 792 என்பதும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments