Ticker

6/recent/ticker-posts

முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு.

09 வது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக் கூடியதாக இருக்குமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் பிரகாரம், பெரும்பாலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் முடிவுகள் முதலில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான விஷேட வேலைத்திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று (21) மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகின்றது. 

இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஏழு இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments