Ticker

6/recent/ticker-posts

கணவனுக்கு ஹார்ட் அட்டாக். மனைவிக்கு?

ஒரு பெண்ணின் போட்டோவை பார்த்து, முடிவெடுத்து திருமணம் செய்து கொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு நிறம். அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவேயில்லை. அவன் தனது மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டும் அவளை தள்ளி வைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும், அவன் மீது அவள் அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படியிருக்கையில் ஒருநாள், "ஏன் என்னை வெறுக்குறீர்கள்? நான் உங்களுடைய மனைவி. நான் உங்களை மிகவும் உங்களை காதலிக்கின்றேன். அது ஏன் உங்களுக்கு புரியயே இல்லை" என்று அவள் சொல்ல கணவனும் எதுவுமே சொல்லாமல் சென்று விடுகின்றான்.

இரவு 01.00 AM இருக்கும். இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். தூங்கும் போது திடீரென அவனுக்கு நெஞ்சு வலி வருகிறது. 

வலி தாங்க முடியாமல் "அய்யோ... அம்மா..." என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட அதிகமாக கதறுகிறாள். உடனே தன்புடைய வீட்டாருக்கும் கணவனின் நண்பர் ஒருவருக்கும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தை சொல்கிறாள். 

கணவன் வலியால் துடிப்பதைஅவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரியை போல் புலம்பிக் கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி தடுமாறித் திரிந்தாள்.

இவளை பார்த்த கணவனும், வலியில் துடொக்கின்ற வேளையில், அவளை பார்த்து பயந்து போகி திருதிருவென அதிர்ச்சியில் முழிக்கிறான். 

அதே சமயத்தில் தன்னுடைய கணவனின் நண்பன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக் கொண்டு "அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள்" என்று அவனோடு காரில் பயணித்தாள். 

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான் அவன். மனைவியின் உறவினர்கள் வைத்தியசாலைக்கு வருகின்றனர். அவளுடைய அழுகை அப்போதும் அடங்கவில்லை. இந்த பெண்ணிற்கு இவன் மேல் இப்படி ஒரு அன்பா? என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடன் அவளை பார்த்தனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு என்று வைத்தியர் சொல்லியிருந்தார்.

மருத்துவர், உறவினர்கள் அவனுக்கு அறிவுரை கூறினர். ஆனால், அவன் தன்னுடைய மனைவியை தேடினான். அவள் வைத்தியசாலையின் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக் கொண்டிருந்தாள். தன்னுடைய மனைவியின் பெயரை முதன் முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். 

அவள் அவ்விடம் ஓடி வந்தாள். அழுதழுது அவளுடைய கண்கள் சிவந்து போயிருந்தது. அவள் கையை பிடித்துக் கொண்டு "இனி நான் புகை பிடிக்க மாட்டேன்!. இத்தனை நாள் உன்னையும் வேண்டா வெறுப்பாக நடத்தி விட்டேன். மன்னித்து விடு" என்றான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் அவளுக்கு ஒன்றாய் வர அழுது கொண்டே சிரித்தாள்.

"நான் உங்களுடைய மனைவி" என்று ஒரு வார்தையில் அவள் சொன்னாள்.  அவன் அவளுடைய நெற்றியில் முத்தமிடுகிறான்.

காலம் எப்படி மாறிப் போனாலும் கணவனை காதலிக்கும் மனைவியர்கள் பலர் இருக்கின்றார்கள்.

இந்த உலகத்திலுள்ள எல்லா உறவுகளும் ஒரு கால கட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்து விடும். ஆனால், கணவன் மனைவியின் உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.



Post a Comment

0 Comments