இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் விஷேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென்றும் அந்த நேரங்களில் பயணிப்போர் தமது அடையாள ஆவணங்களை காண்பித்து பயணிக்கலாம் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments