Ticker

6/recent/ticker-posts

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதற்கு தடை.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், இவ்விடயத்தில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கை கொண்டுவரப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (26) கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய: “.. பாடசாலைக் கல்வியின் வளர்ச்சியானது தற்போதைய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எங்களுடைய அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவ நம்பிக்கையை களைவதற்கு இந்த நிறுவனங்கள் செயற்படுதல் வேண்டும். குறிப்பாக, பரீட்சைகளை நடத்துதல் மற்றும் முடிவுகளை வழங்குதல் ஆகியவற்றையும் விரைவுபடுத்த வேண்டும்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான செயன்முறையின் மூலம் கையாளப்பட வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும்…” என்று அவர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments