Ticker

6/recent/ticker-posts

பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் படுகொலை.

பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.



குறித்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. ஹசன் நஸ்ரல்லாஹ்வின் நிலை குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

எனினும், நஸ்ரல்லாவின் மரணத்தை அறிவித்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி லெப்.ஜெனரல், ஹெர்சி ஹாலேவி, “இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களை அச்சுறுத்துகின்ற யாரையும் நாங்கள் சென்றடைவோம். இது முடிவு அல்ல. இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தும் யாருக்கும் இது ஒரு எளிமையான செய்தியாகும். அவர்களை எப்படி அடைவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd




Post a Comment

0 Comments