Ticker

6/recent/ticker-posts

சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் நீடிப்பு

 இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் 01 வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.


இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த கிரிஸ் சில்வர்வூட் ICC T20 உலகக் கிண்ணத்துடன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.



சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும். 

Post a Comment

0 Comments