Ticker

6/recent/ticker-posts

வேதியியலுக்கான நோபல் பரிசு இவ்வருடம் 03 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியலுக்கான நோபல் பரிசு இவ்வருடம் 03 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சேவையாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சேவையில் மிகச் சிறந்த முறையில் பங்காற்றுவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வருடத்துக்கான நோபல் பரிசில் இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று (09) வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த 02 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு ' புரதத்தை கட்டமைத்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக குறித்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments