Ticker

6/recent/ticker-posts

சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு 05 மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரின் கணவர்..

தனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெறுவதற்கு விரும்பினால் அவர் 01 மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார். இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுப்பார்."

பணத்துடன் சென்ற அமைச்சரின் கணவர்

நான் பிரதமராக இருந்த வேளை எனது அலுவலகத்திற்கு 05 மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள். அதனை எடுத்துக் கொண்டு உடனடியாக வெளியில் செல்லுங்கள் என்றேன்.

எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே இவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்.

அத்தோடு அவர்களை உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என்று எச்சரித்தேன் என்றும்,  அப்போது குறித்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்தார் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார குமாரதுங்க கூறினார்.

ஊழல் மோசடியாளர்களால் நாட்டுக்கு ஆபத்து

அதேவேளை ஊழலுக்குப் பழக்கப்பட்ட மூத்தவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்தோடு, உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள் என்று கூறும் ஒரு ஜனாதிபதி இங்கிருந்தார். அவர் தனது அமைச்சரவையிலும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி எம்.பி.க்களிடமும் இவ்வாறு கூறி வந்தார்.

எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது என்று சந்திரிக்கா பண்டாரநாயக்க மேலும் தெரிவித்தார்.

தொழிலதிபர்கள் தமது திட்டங்களைப் பாதுகாப்பதற்காக இலஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், பரவலான ஊழல் இறுதியில் தேசிய திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நீங்கள் இத்திட்டத்தை 01 முறை அல்லது 02 முறை பெறலாம். ஆனால், அது முழு நாட்டின் நடைமுறையாக மாறுகின்ற போது, ​​நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விடும் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள்  தெரிவித்தார்.  



Post a Comment

0 Comments