Ticker

6/recent/ticker-posts

இந்தியாவின் விடாப்பிடியால் மீண்டும் அமுலுக்கு வரும் 13 ஆம் திருத்தம்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை (04) இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எமது நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசினார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணுகின்ற அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் - நீதி - கௌரவம் - சமாதானம் போன்றவற்றுக்கான அபிலாஷைகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கின்றது.

அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் வேண்டும். இந்நோக்கத்தை அடைவதற்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது உதவும்."  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments