Ticker

6/recent/ticker-posts

காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்திலுள்ள 13 பேருக்கு விஷம் வைத்து கொன்ற இளம் பெண் கைது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உட்பட குடும்ப உறவினர்கள் 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள கைபத்கான் புரோகி என்ற கிராமத்தில் இளம்பெண்ணொருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.




இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து, பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2024 ஆகஸ்ட் 19 ஆம் திகதி பெண் குடும்பத்தில் இருந்த 13 பேருக்கு ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் 13 பேரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் குறித்த பெண்ணை பொலிஸார் விசாரித்த போது, தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைப்பதற்கு தனது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்த  காரணத்தால் அதிக கோபம் ஏற்பட்ட நிலையில், ரொட்டி சமைக்கும் கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார்.

இதனை அறியாமல் குறித்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் கோதுமை மாவில் ரொட்டி சமைத்து சாப்பிட்டதையடுத்து அனைவரும் உயிரிழந்துள்ளனர். 

இதன் பின்னர், குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த குற்றத்திற்காக குறித்த இளம் பெண்ணை நேற்று (09) பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Post a Comment

0 Comments