Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலின் தாக்குதலில் 2,000 க்கும் அதிகமானோர் மரணம்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கி நாளையுடன் (07) வருடமாகிறது. ஈரான், பாலஸ்தீனத்தின் காஸா நகர் மீது னின் ஆதரவை பெற்ற ஹமாஸ் அமைப்புக்கெதிரான இப்போரில் காஸாவில் சுமார் 42 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.


இதனிடையே, மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளிலுள்ள ஈரான் ஆதரவைப் பெற்ற ஆயுதக் குழுக்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து வான் வழியாக தாக்குதல்களை நடாத்தி வருகின்றன.

அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகின்றது. அந்த வகையில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கெதிராக இஸ்ரேல் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி லெபனான் மீது மிகப்பெரியளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது.

தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானின் மூத்த இராணுவத் தளபதி அப்பாஸ் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் ஊடுருவி தரைவழி தாக்குதலையும் தொடங்கியிருந்தது. இதனிடையே ஒக்டோபர்  முதலாம் திகதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியது.

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த இஸ்ரேல், ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் ஈரான்-இஸ்ரேலிடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளமை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது      



Post a Comment

0 Comments