Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் 250 பேர் கொலை.

லெபனானில் கடந்த 04 நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பிலிருந்து அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விஷேட இராணுவத் தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 2000 இற்கும் மேற்பட்ட நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனான் பிரதேசத்திலேயே இராணுவ நடவடிக்கைகள் அதிகளவில் இடம் பெறுவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (03) இரவு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவர் எனக் கருதப்படும் ஹஷெம் சபிட்டைன் குறி வைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும், அவரின் நிலை குறித்தோ அல்லது மேலதிக விபரங்களோ என எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட குறித்த நெடுஞ்சாலையினூடாகவே ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லெபனானிலிருந்து சிரியாவிற்குச் செல்லும் நெடுஞ்சாலையொன்று நேற்று முன் தினம் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments