Ticker

6/recent/ticker-posts

பல மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு.

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இறுதியாக இன்று (06) சிறையிலிருந்து வெளியேறவுள்ளனர்.


பாகிஸ்தான் அரசாங்கத்தின் தொடர்ந்தேர்ச்சையான பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கைதிகள் பறிமாற்ற உடன்படிக்கைக்கமைய அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த குறித்த கைதிகளை அழைத்து செல்வதற்காக விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.



மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கடந்த 03 மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களின் விடுதலைக்காக கடுமையான முயற்சிகளை முன்னெடுத்தார்.



இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் உயர்ஸ்தானிகருக்கும் மொஹ்சின் நக்வி தனது நன்றி தெரிவித்தார்.






Post a Comment

0 Comments