Ticker

6/recent/ticker-posts

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் கசிந்தாக உறுதிப்படுத்தப்பட்ட 03 வினாக்கள் தவிர்ந்த மேலும் வினாக்கள் கசிந்திருக்குமாயின் அவை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.


பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய இது தொடர்பான முறைப்பாடுகள் கோரப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவ்வாறு, ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படின் அருகிலுள்ள காவல் நிலையங்களில் தங்களது முறைப்பாட்டை முன்வைக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடுகளை நாளை திங்கட் கிமைக்கு (13) முன்பாக பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ அவர்கள் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.



Post a Comment

0 Comments