Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டுமாயின் எழுத்து மூலமான அனுமதி பெறுவது அவசியமானதாகும்..

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விஷேட நினைவுச் சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்து மூலமான அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெற வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளரான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.


அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப  செயற்படுவது அவசியமானதெனவும் ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள் உள்ளிட்ட சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலமாக குறித்த அறிவித்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments