Ticker

6/recent/ticker-posts

ரயிலில் மோதுண்டு தாயும் மகனும் பலி. திருகோணமலை - சீனக்குடாவில் சம்பவம்.

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் நேற்று (11) பிற்பகல் ரயில் மோதியதில் தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.



சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



தந்தை கொண்டு வந்த உணவுப் பொதியினை வாங்கிக் கொண்டு ரயில் பாதையை கடக்கும் வேளையிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கல்-ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலிலேயே இருவரும் மோதுண்டு இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Post a Comment

0 Comments