Ticker

6/recent/ticker-posts

இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று (08) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (09) இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 02 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனித மூளையைப் போல இயங்குவதற்கு கணினிக்கு கற்றுத் தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு என்பவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் என்பவரும் கூட்டாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


Post a Comment

0 Comments