Ticker

6/recent/ticker-posts

இழுத்து மூடவிருந்த ரயில் நிலையம். ஒரேயொரு மாணவிக்காக ஒன்றரை வருடங்கள் இயங்கிய உண்மைக் கதை.

ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக மூடப்பட இருந்த ரயில் நிலையத்தை அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை திறந்து வைத்த நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம்தான் இது..!


ஜப்பானின் கியூ ஷீராட்டகி என்ற ஊரில் தினமும் ஒரே ஒரு ரயில் மட்டும் வந்து செல்லும் ரயில் நிலையம் ஒன்று செயற்பட்டு வந்தது. அந்த ரயில் நிலையத்துக்கு போதிய பயணிகள் வராததால் ஜப்பானிய ரயில்வே திணைக்களம், அந்த ரயில் நிலையத்தை 2015 ஆம் ஆண்டு உடனடியாக  மூடி விடுவதற்கு முடிவு செய்தது. ரயில் நிலையத்தை மூடுவதற்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 'கன ஹரதா' என்ற பெயருடைய ஒரே ஒரு பள்ளி மாணவி மட்டும் தினமும் கியூ ஷிராட்டகி  ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு 35 நிமிடங்கள் பயணம் செய்து மற்றுமோர் ரயில் நிலையத்தை அடைந்து அதன் பின்னர் பள்ளிக்கு செல்வதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக ரயில் நிலையத்தை மூடினால் மாணவியின் உயர்பள்ளி படிப்பு பாதிக்கும் என்பதால் குறித்த மாணவியின் படிப்பு முடியும் வரை கிட்டதட்ட 15 மாதங்கள் அந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்து படிப்பு முடிந்த பின்னர் மூடியது ஜப்பானிய ரயில்வே திணைக்களம். பொதுவாக ஜப்பானிய மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். அதற்கான முன்னுதாரணமே இச்சம்பவமாகும்.


Post a Comment

0 Comments