Ticker

6/recent/ticker-posts

வஸீம் தாஜுதீன், பிரதீப் எக்னலிகொட, லசந்த ஆகியோரின் கொலைச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதில் தாமதம்

லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் வஸீம் தாஜுதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், அவர்களைத் தவிர 07 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், ஏனைய கொலைகள் தொடர்பான விசாரணைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்றது.

தற்போது நடைபெற்று வரும் குற்ற விசாரணைகள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையையும் நாம் விசாரிக்காமல் இருக்க மாட்டோம். அதனால்தான் சமீபத்திய சம்பவங்களான வஸீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, மற்றும் பிரகீத் எக்னெலிகொட கொலை என்று அனைத்தையும் நாம் நிச்சயமாக விசாரிப்போம். பிரகீத் எக்னெலிகொட கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகின்றது. எனவே, மீண்டும் ஒரு விசாரணை தேவையில்லை. மேலதிக விசாரணைகள் தேவைப்படுமாயின் அதனை எம்மால் தொடரவும் முடியும். 07 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டு அவசரமாக முடிக்கப்பட வேண்டியுள்ளது. மற்றபடி 07 தான் என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம். கடந்த காலங்களில் நடந்த அனைத்து விதமான பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள், ஊடகவியலாளர்கள் கடத்தல் போன்ற அனைத்துச் செயல்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments