அரசியலமைப்பின் 20 வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து சமூகத்தை காட்டிக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காது அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு வந்தால், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் ஒன்றிணைந்து பயணிக்கத் தயார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தலைவர் ரிஷாத் பதியுதீன் அறிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குள் ஒற்றுமை இல்லை என்றும், அவர்கள் பிரிந்து இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை கொண்டுள்ள நிலையில், அது தொடர்பில் வினவிய போதே ACMC கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இதனை தெரிவித்தார்.
“மு.கா தலைவர் ஹகீமுடன் சேர்ந்து பயணிக்க எந்தவித தடையும் இல்லை. ஆனால், அவர் 20 ஆம் திருத்தத்துக்கு கையுயர்த்தியவர்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டு வர வேண்டும். அவ்வாறு வந்தால் அவர்களோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) இணைந்து பயணிக்கும். வேறு எந்த நிபந்தனையும் இல்லை.” என்று தெரிவித்தார்.
0 Comments