Ticker

6/recent/ticker-posts

ஹக்கீமுடன் இணைவதற்கு ரிஷாத் விதித்த நிபந்தனை.

அர­சி­ய­ல­மைப்பின் 20 வது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்து சமூ­கத்தை காட்டிக் கொடுத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­காது அவர்­களை கட்சியில் இருந்து நீக்­கி­விட்டு வந்தால், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீ­முடன் ஒன்­றி­ணைந்து பய­ணிக்கத் தயார் என்று அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் (ACMC) தலைவர் ரிஷாத் பதி­யுதீன் அறிவித்­துள்ளார்.


முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்குள் ஒற்­றுமை இல்லை என்றும், அவர்கள் பிரிந்து இருப்­ப­தா­கவும் சமூக ஆர்­வ­லர்கள் பலரும் கவலை கொண்­டுள்ள நிலையில், அது தொடர்பில் வின­விய போதே ACMC கட்சியின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் இதனை தெரி­வித்தார்.

“மு.கா தலைவர் ஹகீ­முடன் சேர்ந்து பய­ணிக்க எந்தவித தடையும் இல்லை. ஆனால், அவர் 20 ஆம் திருத்­தத்­துக்கு கையு­யர்த்­தி­ய­வர்­களை கட்சியிலிருந்து நீக்கி விட்டு வர­ வேண்டும். அவ்­வாறு வந்தால் அவர்­க­ளோடு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் (ACMC) இணைந்து பயணிக்கும். வேறு எந்த நிபந்தனையும் இல்லை.” என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments