Ticker

6/recent/ticker-posts

ஒஸாமா பின்லேடனின் மகனை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு.

ஒஸாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியே வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‛‛கடற்படை சீல்ஸ்'' நடாத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட அல் - கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இளைய மகன் ஒமர் பின்லேடன் (43), சவூதியில் பிறந்த ஒமர் பின்லேடன் என்பவர் ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டார். பின்னர், அவர் பிரிட்டனில் தஞ்சமடைய விரும்பினார். எனினும், அந்நாட்டு அரசாங்கம் அவரை ஏற்க மறுத்தது.

இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வடக்கு பிரான்ஸிலுள்ள நார்மண்ட் என்ற இடத்தில் ஓவியர், எழுத்தாளர், சமூக சேவகர், தொழிலதிபர் எப்று பல்வேறு துறைகளில் இயங்கி வருகின்றார்.

இந்நிலையில் பிரான்ஸ் உள்துறை அமைச்சரான புருனே ரீடெய்லியூ என்பவர் தனது X தளத்தில் பதிவேற்றியுள்ளதாவது,

ஒமர் பின்லேடன், சமூக வலைதளங்கள் வாயிலாக மறைமுகமாக பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிய வருகின்றது. ஏற்கனவே, ஜிகாதியின் மகனாக இருப்பதனால், நாட்டிற்கு ஏற்படும் பின் விளைவுகளை கருத்திற் கொண்டு அவர் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக பிரான்ஸ் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனை தற்போது நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. எனவே, ஒமர் பின்லேடன் எந்தவொரு விளக்கமும் தர வேண்டியதில்லை" என்று அதில் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments