பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் இன்று (04) முதல் ஆரம்பமாவதாகி எதிர்வரும் 11 ஆம் திகதி பகல் 12.00 மணியுடன் அந்த செயற்பாடுகள் நிறைவடையுமென்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேவேளை, தேர்தல் விதிமுறைகள் குறித்து பொலிஸ் திணைக்களம் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் சின்னங்களின் மாற்றம், அரசியல் கட்சிகளின் பெயர் மாற்றங்கள், செயலாளர்கள் தொடர்பில் சிக்கல் நிலவும் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments