Ticker

6/recent/ticker-posts

குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினை கருத்திற் கொண்டு மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை, பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்படுவதால், மூடுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, மேல் மாகாணத்திலுள்ள கடுவலை, கொலன்னாவ மற்றும் வத்தளை போன்ற கல்விப் பிரிவுகளுக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை (14) மூடப்படவுள்ளதாகவும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments