அடுத்த வருடம் ஜனவரியில் மீண்டும் பெருமளவான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியுமென எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நிதியை ஏற்கனவே மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments