முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து நாட்டை விட்டு வெளியேறி சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி நிசாந்த டி. சில்வா மீண்டும் நாட்டிற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, அநுர அரசாங்கத்தில், நிசாந்த டி சில்வாவிற்கு 01 வருட கால பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிசாந்த டி. சில்வாவிற்கும், சானி அபேசேகரவிற்கும் நீண்ட தொடர்பொன்று காணப்படுகின்றது. இருவரும் பல வழக்குகளை நேரடியாகவே கையாண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்பாக நிசாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இவ்வாறு இருக்கையில், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் நாட்டில் இடம்பெற்ற ஏனைய முக்கிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சானி அபேசேகரவின் கீழான குழு தற்போது விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இவற்றுக்கு மத்தியில், மீண்டும் புலனாய்வு அதிகாரி நிசாந்த டி சில்வா நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments