Ticker

6/recent/ticker-posts

"பெரிய தப்பு பண்ணிட்டாங்க" கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பை கடுமையாக எச்சரித்துள்ள நெதன்யாகு, “மிகப்பெரிய தவறு செய்து விட்டார்கள்” எனவும் இஸ்ரேல் மக்களை துன்புறுத்த முயற்சித்தால் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் செயற்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்குமிடையே அடிக்கடி மோதல் போக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் ஹமாஸ் அமைப்பினர் முன்னெடுத்தனர். இதில் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், 250 பேரை பணயக் கைதிகளாகவும் ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

இதனால், கோபமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் என்று கூறி முழு அளவிலான போரை அறிவித்தது. அப்போது முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகின்றது. ஒரு வருடத்துக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரில், இதுவரை 42,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 01 லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதராவக லெபானானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தினர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதே போல, காஸாவில் இஸ்ரேல் படைகள் நடாத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். இதனால், ஹமாஸ் அமைப்பினர் கடுமையாக கோபமடைந்துள்ளனர்.

இந்நிலையில்தான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை குறி வைத்து டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிசேரியாவில் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடாத்தப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது X தளத்தில், வீட்டின் மீது நடாத்தப்பட்ட டிரோன் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு என்பவர் இது குறித்து தெரிவிக்கையில்;

“என் மீதும், எனது மனைவியின் மீது நடைபெற்ற கொலை முயற்சி மிகப்பெரும் தவறான செயலாகும். இப்படி செய்வதால் என்னையோ இஸ்ரேல் முன்னெடுத்து வரும் எதிரிகளுக்கெதிரான சண்டையை முடக்கி விடாது. இஸ்ரேல் மக்களை துன்புறுத்துவதற்கு யாராவது முயற்சித்தால் கடும் விலையை கொடுக்க நேரிடும்.

காஸாவிலிருந்து எங்களின் பணையக் கைதிகளை நாங்கள் மீட்போம். வடக்கு எல்லையில் வசித்த எங்கள் நாட்டு மக்களுக்கு அவர்களின் வீடுகளை பத்திரமாக திரும்பி ஒப்படைப்போம். போர் தொடர்பான எங்களின் எல்லா இலக்குகளையும் பூர்த்தி செய்வதற்கு இஸ்ரேல் உறுதியாக உள்ளது. எதிர்காலத்திலுள்ள தலைமுறைகளுக்கு நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரத்தை மாற்றுவோம். பயங்கரவாதிகளையும் அவர்களை அனுப்புவர்களையும் தொடர்ந்து நாங்கள் ஒழித்து கட்டுவோம்” என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


Post a Comment

0 Comments