Ticker

6/recent/ticker-posts

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ஈஸ்டர் நிகழ்வு தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே பாதுகாப்பு தரப்பினரிடம் விசாரணைக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு சில குழுக்களை ரணில் விக்ரமசிங்க நிறுவியது உண்மையை கண்டறிய அல்ல எனவும் விசாரணைகளை திசை திருப்பவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என மக்களால் நம்பப்படுகின்றது.




Post a Comment

0 Comments