Ticker

6/recent/ticker-posts

அரசியலை விட்டு சினிமாவில் களமிறங்கும் அமைச்சர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக திரைப்படம் தயாரிப்பது போன்ற அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனது 20 வருடகால அரசியல் வாழ்க்கையில் ஹோமாகம பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவைப் பேச்சாளர், இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சர் போன்ற பதவிகளிலும் தான் கடமையாற்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குறித்த பதவிகளின் மூலமாக மக்களுக்குத் தன்னால் இயன்றவரை சேவையாற்றியுள்ளதாக தெரிவித்த பந்துல குணவர்தன, ஹோமாகம பிரதேசத்திற்கும் தன்னால் இயன்றதை செய்ததில் மிகத் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.

தற்போது திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஆர்வத்துடன், எதிர்வரும் ஆண்டுகளிலிருந்து முனைவர் பட்டப் படிப்பைத் தொடர விரும்புவதாகவும், இதன் காரணமாக பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments