Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள நிப்போன் ஹோட்டலில் தேசிய பலசேனா அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ​​அல்-குர்ஆனை அவமதித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ​​அவர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கெதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த முறைப்பாட்டிற்காக கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றில் முன்னிலையாகினர். இதனையடுத்து, குறித்த விசாரணை மார்ச் 05, 2025 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments