Ticker

6/recent/ticker-posts

டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரை கொலை செய்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றது.



இந்நிலையில், இன்று (14) 03 வது முறையாக, டொனால்ட் ட்ரம்பை கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது. அமெரிக்கா, கோசெல்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நபரொருவரை துப்பாக்கியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 



49 வயதான வெம் மில்லர் என்பவரே இவ்வாறு குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments