Ticker

6/recent/ticker-posts

இறைச்சியை உண்ண வேண்டாம் என அரசாங்க கால்நடை வைத்திய சங்கம் அறிவிப்பு.

தற்போது பன்றிகளுக்கிடையில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோன்று, பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி என்பவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலை காரணமாக இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளிலும் பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படும் இடங்களிலும் விஷேட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments