இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் இடைநிறுத்தியதாகவும் ஏனைய நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டுமென்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்பிரகாரம், கடந்த வருடம் மட்டும் 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. ஆனால், இஸ்ரேலும் அதிகளவில் ஆயுதங்கள் வழங்கும் முதன்மை நாடாக பிரான்ஸ் ஒருபோதும் இருந்ததில்லை.
”இன்றைய அரசியல் ரீதியான தீர்வுக்கு என்ன தேவையென்றால், காஸாவில் நடத்தப்படும் போருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவது நிறுத்தப்படல் வேண்டும். பிரான்ஸ் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்காது.
”போர் மேலும் நடப்பதைத் தடுப்பதே இப்போது தங்களின் எண்ணம். லெபனான் லெபனான் மற்றோரு காஸாவாக மாறக்கூடாது” என அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோயல் பாரட் 04 நாட்கள் அரசு பயணமாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். வருகின்ற திங்களன்று (ஒக்டோபர் 07) இஸ்ரேல் சென்று தனது பயணத்தை அவர் முடிக்கவுள்ளதால் பிரான்ஸ் அதிபரின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.
0 Comments