Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியலமைப்புத் திருத்தம் விரைவில்!

நாட்டில் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார நேற்று (05) வெள்ளவத்தையிலுள்ள அமரபுர பீடத்தின் தேரர்களிடம் ஆசி பெற்றதன் பின்னர், அவர்களிடம் இதனைத் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீண்ட கலந்துரையாடல்கள், பொதுமக்கள் மற்றும் வாக்கெடுப்பினூடாக மாத்திரமே தாம் அதனை எதிர்பார்த்திருப்பதாகவும் இதன் போது குறிப்பிட்டுள்ளார். 

கடந்த அரசாங்கங்கள் அரசியலமைப்பு திருத்தங்களை தமது தேவைகளுக்கேற்பவே செய்து கொண்டதாகவும், மக்களின் தேவைக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படவில்லை என்றும் இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.

எது எவ்வாறாயினும், நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தி மக்கள் எதிர்பார்ப்புக்கமைய, புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments