Ticker

6/recent/ticker-posts

உலகின் பணக்கார நகரம் அறிவிப்பு.

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலமாக பெறும் வருவாய் அடிப்படையில், உலகில் பணக்கார நகரமாக அபுதாபி வாகை சூடியிருக்கிறது.


பல்வேறு நாடுகளின் அரசுகள் சொந்தமாக தமது நிதிகளை உருவாக்கி, அவற்றை பங்குகள், பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலமாக வருவாய் ஈட்டும். இந்த நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் குளோபல் S.W.F. சார்பாக உலகிலேயே பணக்கார நகரம் அறிவிக்கப்பட்டு வருகின்றது.



இதன் பிரகாரம், நடப்பு மாத நிலவரப்படி, அபுதாபி அரசு 1.7 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டு நிதிகளைப் பெற்று உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.



அபுதாபி அரசைப் பொருத்தவரையில், எமிரேட்ஸ் முதலீட்டு ஆணைய நிதி மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணைய நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியமைப்புகள் மூலமாக வருவாய் ஈட்டப்படுகின்றது.



கடந்த ஒரு சில வருடங்களாக, அபுதாபி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments